பயமுறுத்தும் தோற்றத்துடனும், கொடிய சுபாவத்துடனும் இருக்கும் புலிகள் நம்மில் பலரை நிச்சயம் பயமுறுத்துகின்றன. இந்நிலையில், பெண் ஒருவர் தூக்கத்தில் இருந்த புலியை எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



ஒரு பெண் குகை போன்ற இடத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறது. அதனை வீடியோ எடுத்தப்படியே அணுகும் பெண் ஒருவர் “ஸியோன் (அந்த புலியின் பெயர் ) ..எழுந்துரு... குட் மார்னிங்....இன்றைய நாளுக்கு நீ தயாரா ? “ என கேட்டு எழுப்புகிறார். அந்த குரலை கேட்டு எழுந்த புலி , தனது  பயமுறுத்தும் கர்ஜனையுடன் ஒரு கொட்டாவி விடுகிறது. அது என்னவோ அந்த பெண் ‘குட் மார்னிங் ‘ என்பதற்கு பதிலளிப்பது போலத்தான் இருக்கிறது.





இன்ஸ்டாகிராமில் @africasafariplanet என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மற்றும் அது கிட்டத்தட்ட 20k லைக்குகளைக் குவித்துள்ளது. இருந்தாலும் இது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புலி, சிங்கம் போன்ற காடுகளை வாழ்விடமாக கொண்ட விலங்குகள் எப்போதும் நட்புடனே இருக்காது என சிலர் பயத்திலும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரம் சிலர் “ பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் அழகாக இருக்கிறது, என தெரிவித்துள்ளனர். சிலர் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டினர். "100% கரெக்ட்..இந்த புலி இவரது செல்லப்பிராணிதான்” என தெரிவித்துள்ளனர்


 


"காலை வணக்கம் சீயோன்!" என்னும் கேப்ஷனுடன் பதிவிடப்பட்ட இந்த வீடியோ இந்த வீடியோ சுமார் 200 ஆயிரத்திற்கு அதிகமான பார்வைகளையும் சுமார் 21 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. காலை வேலையை துவங்க செல்லும் , புலியின் அடுத்தடுத்த செயல்பாடுகளையும் வீடியோக்களாக பதிவிட வேண்டும் என சிலர் அந்த வீடியோவின் கீழே கோரிக்கையும் விடுத்துள்ளனர்.






அந்த பெண் அதனை செல்ல பிராணியாக ஒன்றும் வளர்க்கவில்லை. அவர் ஒரு உயிரியல் பூங்கா பராமரிப்பாளர்.  பூங்காவில் அவருக்கு பிடித்தமான விலங்குகளுடன் அவர் செலவிடும்  தருணங்களை வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.