பொதுவாக நாய்,பூனை போன்ற பெரிய பெரிய விலங்குகளை பலரும் பயமின்றி வளர்த்து வருவார்கள். ஆனால் மிகச் சிறிய பூச்சிகள், கருப்பான் பூச்சி, பல்லி ஆகியவற்றை பார்த்து பலரும் பயப்படுவார்கள். அந்தவகையில் ஒரு புறநகர் ரயிலில் கருப்பான் பூச்சி வந்துள்ளது. அந்த கருப்பான் பூச்சியை பார்த்த பலரும் பயந்து அலறியுள்ளனர். அந்த சமயத்தில் ஒருவர் செய்த செயல் மிகவும் வைரலாகி வருகிறது. 


 


இந்தச் சம்பவம் தொடர்பாக சப்வே கிரியேச்சர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் வெளிநாட்டில் ஒரு புறநகர் ரயிலில் கருப்பான் பூச்சி வந்துள்ளது. அதை பார்த்த பயணிகள் சிலர் அலறி அடித்து ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் ஒரு நபர் தன்னிடம் இருந்த பாட்டிலை வைத்து அந்த கருப்பான் பூச்சியை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த பூச்சியை அவரால் கடைசி வரை பிடிக்க முடியவில்லை. 


 






இந்த வீடியோவை தற்போது வரை 8 லட்சம் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை சிரித்து பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: நீ உண்மையான புறாவா... இல்லை...- வைரல் வீடியோ!