சமூக வலைதளங்களில் இரண்டு விலங்குகளுக்கு இடையே நல்ல பாசமான உறவு இருந்தால் அது நிச்சயம் வைரலாகும். அதுவே இரு விலங்கு மற்றும் ஒரு மனிதருக்கு நடுவில் பாசம் இருந்தால் அது நிச்சயம் ஆச்சரியமான ஒன்று தான். அந்தவகையில் ஒரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் விலங்குகள் என்னென்ன?


அதன்படி லூனா என்ற கருஞ்சிறுத்தை 8 வயதாக இருந்த போது தன்னுடைய தாயால் கைவிடப்படப்பட்டுள்ளது. இந்த கருஞ்சிறுத்தையை ராட்வீலர் நாய் வளர்த்து கொண்டிருக்கும் பெண் ஒருவர் பார்த்துள்ளார். அவருக்கு உள்ள விலங்கு நல ஆர்வம் இந்த கருஞ்சிறுத்தையும் சேர்த்து வளர்க்க முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த கருஞ்சிறுத்தையை அவர் தத்தெடுத்துள்ளார். 


 






லூனாவும் அந்த ராட்வீலர் நாய் வென்சாவும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசமாக இருந்து வந்துள்ளன. இந்த இரண்டு விலங்குகளின் பாசம் மிகவும் நெகிழ்ச்சி அடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு விலங்களுக்கும் இருக்கும் பாசம் மற்றும் அந்த கருஞ்சிறுத்தை வளர்ந்த விதம் தொடர்பாக லூனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. 


அந்த வீடியோவை தற்போது வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அந்த பதிவில், “எவ்வளவு சீக்கிரம் இந்த இருவரும் வளர்ந்துள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். இந்த இரு விலங்குகளின் பாசத்தை பார்த்து பலரும் நெகிழ்ந்த்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:கெத்தா... ஸ்டைலா.. மனிதர்களைப் போல மாஸாக நடக்கும் நாய்..! வைரல் வீடியோ!