அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சுடுதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் இருக்கும் வாஷிங்டன் பூங்காவின் அருகே ஒரு துப்பாக்கி சுடுதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுடுதல் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த இடத்தில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.