ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் இனி நெடுந்தூரப் பயணத்தின்போது ஆண்கள் துணையின்றி செல்ல அனுமதிக்க முடியாது என்றும், ஆண்கள் துணைக்கு வருவது கட்டாயம் என்றும் தலிபான் அரசு அறிவித்துள்ளது.




தலிபானின் இந்த முடிவிற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தலிபான்களின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது,


“பெண்கள் தனியாக பயணிக்கக்கூடாது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தனியாக செல்லக்கூடாது என்பது பிற்போக்குத்தனமானது. இதுபோன்ற எண்ணங்கள் பாகிஸ்தானுக்கு மிகவும் அபாயகரமானது. பாகிஸ்தான் தனது சொந்த முற்போக்கு போக்கை வகுக்க வேண்டும். பாகிஸ்தான் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.




பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பங்கை முகமது அலி ஜின்னா தெளிவுபடுத்தினார். மத விஷயங்களில் வணிகம் இல்லாத ஒன்றை நாடாக தான் உருவாக்க அவர் நினைத்தார். முகமது அலி ஜின்னா ஒருபோதும் பாகிஸ்தானை ஒரு மதச்சார்புள்ள நாடாக உருவாக்க விரும்பவில்லை.


பிற்போக்கு சிந்தனைக்கு எதிரான அவரது போராட்டம் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது. அதை வெல்வதன் மூலம் மட்டுமே நாமோ அல்லது வேறு எந்த நாடுமோ முன்னேற முடியும்" இவ்வாறு அவர் பேசினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பிறகு, அந்த நாட்டு மக்கள் பலரும் உயிர் பயத்தில் நாட்டை விட்டு வெளியேறியதும், பலரும் வான் வழியாகவும், தரைவழியாகவும் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்ததும் குறிப்பிடத்தக்கது.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண