Fishermen: கைது செய்த நாகை மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்த இலங்கை: ஆனால்...?

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

நாகையைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

Continues below advertisement

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் 12 பேரும் யாழ்ப்பானத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். 

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அன்று அதிகாலை கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.

அப்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை மீட்டு,  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்களது வாழ்வாதாரமான படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் விடுவித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

மேலும், இலங்கை மீனவர்களாலும் கடற் கொள்ளையர்கள் கடுமையான ஆயுதங்களால் தாக்கப்படுவதும் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் செல்வதும்,இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவத்தாலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அச்சம் எழுந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மீனவர்கள், கடலில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola