இலங்கை நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து இலங்கை மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்தா ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரதமர் மஹிந்தாவை பதவி விலக வேண்டுகோள் விடுத்தத்தாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொருளாதார சூழல் மற்றும் மக்கள் போராட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் மஹிந்தா ராஜபக்ச பதவி விலக அதிபர் கோத்தபய வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. 


எனினும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மஹிந்தா ராஜபக்ச எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவை அவர் வரும் திங்கட்கிழமைக்குள் எடுப்பார் என்று கருதப்படுகிறது. இலங்கையில் அமையும் புதிய ஆட்சி நாட்டின் பொருளாதார சிக்கல்களை சரி செய்யும் என்றால் அதற்கு தாம் உறுதுணையாக இருப்பேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக இன்று சில மாணவர்கள் அமைப்பு இலங்கை நாடாளுமன்றம் முன்பாக பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண