இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பாதுக்காப்பிற்காக திரிகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லம் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றோம். 


இலங்கையில் நிலைமை சீரானதும் மகிந்த ராஜபக்சே விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 


முன்னதாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சித்து வருகின்றனர். மஹிந்த ராஜபக்சே நேற்று காலை பிரதமர் மாளிகையில் இருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறிய நிலையில், அவரது மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமிஷா வீரசிங்கே நேற்று தனது வீட்டில் இருந்து தப்பி ஓடினர்.






இலங்கையில் அமைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக அறவழியில் அமைதியாக போராடிய மக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினார். இதனால், மக்களின் கோபத்திற்கு இலங்கை அரசு ஆளாகியது.





இதனால் ஏற்பட்ட பெரும் வன்முறையால் 35 அமைச்சர்கள் வீட்டை போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். ராஜபக்சேவின் பழமையான வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த சூழலில் உயிருக்கு பயந்து ராஜபக்சே விமானம் மூலமாக வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 

 

தற்போது, ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அங்கே பதுங்கியிருப்பதை அறிந்த பொதுமக்கள் ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டைவிட்டு தப்பி ஓடக்கூடாது என்று கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண