Watch Video : சேட்டைக்கார கடல் சிங்கமால இருக்கு...! இது பண்ற காரியத்தை நீங்களே பாருங்க..!

நீச்சல் குளத்தில் நீந்தி மனிதர்களைப் போல பெட்டில் படுத்து ஓய்வு எடுக்கும் கடல் சிங்கத்தின் வீடிேயோ தற்போது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

கடல் வாழ் உயிரினங்கள் பலவும் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக நட்பாக பழகும் தன்மை கொண்டவைகள். டால்பின் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு கொண்டிருக்கும். அதேபோல, கடல் சிங்கம் எனப்படும் சீல்ஸ்களும் மனிதர்களுடன் வேடிக்கையாக விளையாடும் குணம் கொண்டவை. பார்ப்பதற்கு சற்று டால்பின் போன்றே உருவ தோற்றம் கொண்டவை,

Continues below advertisement

நீர் மட்டுமின்றி நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட கடல் சிங்கங்கள் அவ்வப்போது கரைக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடு ஒன்றில் கடற்கரையை ஒட்டி மிகவும் அழகான நீச்சல்குளம், நீச்சல் குளத்தின் அருகே படுப்பதற்கான இருக்கை வசதி ஆகியவையுடன் ஒரு சுற்றுலா தளம் அமைந்துள்ளது.

வீடியோவை காண கிளிக் பண்ணுங்க...

 

இங்கே கடலின் இருந்து மெல்ல படிக்கட்டு வழியே அந்த சுற்றுலா பகுதிக்குள் நுழைந்த கடல்சிங்கம் அப்படியே நீச்சல்குளத்தில் இறங்கி நீந்தி நீச்சல் அடித்து மற்றொரு வழியாக படியில் ஏறுகிறது. படியில் ஏறியது மட்டுமின்றி நீச்சல் குளத்தின் அருகே குளித்தவுடன் படுப்பதற்காக இருந்த இருக்கை மீது மனிதர்களை போலவே படுத்துக் கொண்டது. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் பலரும் சிரித்தனர்.

இதை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.  

மேலும் படிக்க : மாடலிங் செய்த பெண்ணை சுட்டுக்கொன்ற அண்ணன்… பாகிஸ்தானில் அரங்கேறும் புதுவித ஆணவக்கொலை!

மேலும் படிக்க : தன்னை கழுதை என கூறிக்கொண்ட இம்ரான் கான்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ !

Continues below advertisement
Sponsored Links by Taboola