விண்வெளியில் 25 விநாடிகளுக்கு ஒரு முறை சூழலும் புதிய நட்சத்திரம் ஒன்றை இங்கிலாந்து வார்விக் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. 25 விநாடிக்கு ஒருமுறை சுழலும் ஒரு கோளில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு கோளைதான் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இங்கிரிட் பெரிசோல் கண்டுபிடித்துள்ளார். இதில் மனிதர்கள் வாழமுடியுமா என்கிற ஆய்வுகள் எல்லாம் இன்னும் திட்டமிடப்படவில்லை என்றாலும் இதற்கு "லாமோஸ் J0240+1952” எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள் இருக்கிறது. இது வெள்ளை ட்வார்ஃப் எனப்படும் ஒருவகை கோள் பிரிவை சார்ந்தது. இந்த வகைக் கோள்கள் தன்னை ஒட்டி நகரும் பொருட்களை வேகமாக கடத்தும் தன்மை கொண்டது. இதற்கு முன்பு இதே போல 30 விநாடிகளுக்கு ஒருமுறை சுழலும் HD 49798 என்னும் கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, சுமார் 225 கிலோமீட்டர் விட்ட அளவு கொண்டவை என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ட்ரோஜான் விண்கற்களின் பெயர் கிரேக்கப் புராணங்களில் இருந்து சூட்டப்பட்டது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரகங்கள் எப்படி தோன்றின, எப்படி இன்றைய நிலைக்கு உருவாகின என்று லூசியின் ஆய்வுகள் நமக்கு குறிப்புகளை அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 




இந்த விண்கற்களில் கார்பன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பூமியில் உயிர் தோன்றியது குறித்து புதிய பரிமாணங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. `நமது சூரியக் குடும்பத்தின் தொடக்க காலத்தின் எச்சங்கள் இந்த ட்ரோஜன் விண்கற்கள்’ என லூசி விண்கலத் திட்டத்தின் தலைமை ஆய்வாளர் ஹாரோல்ட் லெவிசன் தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வின் வரலாற்றில் லூசியைப் போல இத்தனை விண்கற்களை ஆய்வு செய்வதற்காக இதுவரை எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டதில்லை என நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


 



நமது சூரியக் குடும்பத்தின் முக்கிய விண்கற்களின் இடமான டொனால்ட் ஜொஹான்சன் என்ற பகுதியையும் லூசி ஆய்வு செய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. வரலாற்றின் முதல் மனிதரின் படிமம் 1974ஆம் ஆண்டு எதியோபியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு `லூசி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அதே பெயர் இந்தத் திட்டத்திற்கும் சூட்டப்பட்டுள்ளது. 



லூசி விண்கலம் மற்றொரு வரலாற்றுச் சிறப்பான சாதனையையும் செய்யவுள்ளது. புவியீர்ப்பு விசைக்காக பூமியை மூன்று முறை வலம் வரவுள்ள லூசி விண்கலம் சூரியக் குடும்பத்தின் வெளி எல்லையில் இருந்து மீண்டும் பூமிக்குத் திரும்பவுள்ள முதல் விண்கலமாக இருக்கப் போகிறது எனவும் நாசா அறிவித்துள்ளது. வியாழன் கிரகத்தில் ட்ரோஜன் விண்கற்கள் என்றழைக்கப்படும் பெரிய விண்கற்களை ஆய்வு செய்யும் பணிகளை அறிவித்துள்ளது நாசா நிறுவனம். இப்படியான திட்டம் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த இரு விண்கற்களும் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள கிரகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருப்பவை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 



நாசா சார்பில், அமெரிக்காவின் ப்ளோரிடா பகுதியின் கேப் கேனவெரால் விமானப் படை நிலையத்தில் இருந்து `லூசி’ என்று பெயர் சூட்டப்பட்ட விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதனை `அட்லஸ் வி’ என்ற ராக்கெட் விண்ணுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த ராக்கெட்டை போயிங் நிறுவனமும், லாக்ஹீட் மார்டின் கார்ப் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. 



லூசியின் செயல்திட்டம் என்பது அடுத்த 12 ஆண்டுகளுக்குப் பல்வேறு எண்ணிக்கைகளிலான விண்கல்களை ஆய்வு செய்வதாகவும். வியாழன் கிரகத்தின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் இருந்து சூரியனை வலம் வரும் `ட்ரோஜன்’ என்றழைக்கப்படும் மிகப்பெரிய கற்களின் கூட்டம் குறித்து முதல் முறை ஆய்வு செய்யப் போவது லூசி விண்கலம் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.