Crime : மனைவியை கொன்று கொதிக்கும் எண்ணெயில் போட்ட சந்தேக கணவன்..! பிள்ளைகள் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம்..!

பாகிஸ்தானில் மனைவியை கொலை செய்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.

Continues below advertisement

பாகிஸ்தானில் அமைந்துள்ள சிந்து மாகாணம். இங்கு அமைந்துள்ளது குல்ஷான் இ இக்பால் நகரம். இந்த நகரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வாட்ச்மேனாக பணியாற்றி வருபவர் ஆஷிக். இவருடைய மனைவி நர்கீஸ். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ஆஷிக் சந்தேக குணம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால், தனது மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார். .

Continues below advertisement

இந்த நிலையில், சம்பவத்தன்றும் வீட்டிற்கு வந்த ஆஷிக் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவருடன் சண்டையிட்டார். அப்போது, வீட்டில் அவர்களது 3 குழந்தைகள் இருந்துள்ளனர். தந்தை தாயுடன் சண்டையிடுவதை அவர்கள் தடுக்க முயன்றும் அவர்களால் அவர்களது தந்தையை தடுக்க முடியவில்லை. ஆஷிக் ஆத்திரத்தில் நர்கீசை கடுமையாக தாக்கினார்.


பின்னர், மனைவி என்றும் பாராமல் பிள்ளைகளின் கண் முன்னே நர்கீசை தலையணை வைத்து மூர்க்கத்தனமாக நெரித்துள்ளார். இதில், மூச்சுவிட முடியாத நர்கீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். நர்கீஸ் உயிரிழந்த பிறகும் ஆத்திரம் அடங்காத நர்கீஸ் அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை கொதிக்க வைத்துள்ளார்.

 

பின்னர், கொதிக்கும் எண்ணெயின் நர்கீசின் உடலைப் போட்டு கொதிக்கவைத்துள்ளார். இதைக்கண்டு அவரது பிள்ளைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர், அவர்களில் மூன்றாவது மகளான 15 வயது சிறுமி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்  நர்கீஸ் உடல் கொதிக்கும் எண்ணெயில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், ஆஷிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். நர்கீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.



மனைவியை கணவனே கொலை செய்து கொதிக்கும் எண்ணெயில் வேகவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 2011ம் ஆண்டு இன்னொரு திருமணம் செய்வதாக கூறிய கணவனை மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Viral Video: பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை: மீட்கப் போராடும் தாய் யானை - வீடியோ வைரல்!

மேலும் படிக்க : EXCLUSIVE: ரணில் அதிபர்..? சஜித் பிரதமர்..? : சர்வ கட்சி அரசாங்கம்.. இலங்கையின் புது அத்தியாயம் விரைவில் தொடக்கம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola