ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே வெள்ளிக்கிழமை நாரா நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றதையடுத்து கொலையாளி உடனடியாக கைது செய்யப்பட்டார்.




மேற்கு நகரமான நாராவில் உள்ள ரயில் நிலையத்திற்கு வெளியே ஷின்சோ அபே பிரச்சார உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது இரண்டு முறை அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அபேவை சுட்டவர், சாம்பல் நிற டி-சர்ட் மற்றும் பழுப்பு நிற கால்சட்டையை அணிந்திருந்தார். இதையடுத்து, அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருள்கள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.


அபேவை சுட்டு கொலை செய்தவரின் பெயர் டெட்சுயா யமகாமி என தெரிய வந்துள்ளது. 41 வயதான டெட்சுயா யமகாமி, ஜப்பானிய கடற்படையில் பணியாற்றியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, அபேவுக்கு பின்பு 10 அடி தூரத்தில்தான் யமகாமி நின்று கொண்டிருந்தார்.


உரை நிகழ்த்தி கொண்டிருந்த அபே, நடுவிலேயே நிலைகுலைந்து கீழே விழுந்துவிட்டார். பின்னர், பாதுகாப்பு படையினர் கொலையாளியை பிடித்தனர். துப்பாக்கியால் சுட்ட பின்பும், கொலையாளி தப்பிக்க முயற்சி செய்யவில்லை என ஜப்பான் பொது செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.




நாரா நிஷி காவல் நிலையத்தில் கொலையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்யும் எண்ணத்துடன்தான் அபேவை சுட்டுதாக கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார். அபேவை சுட பயன்படுத்திய துப்பாக்கியை கொலையாளி தனது வீட்டியேலேயே தயாரித்ததாக அவர் கூறியுள்ளார்.


இதையடுத்து, அபேவை சுட்டு கொலை செய்தது ஏன் என பல திடுக்கிடும் கேள்விகளுக்கு கொலையாளி பதில் அளித்துள்ளார். அந்த வகையில், மத அமைப்பு ஒன்றுடன் அபே தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த மத அமைப்பின் காரணமாக தன்னுடைய தாய் நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டதாகவும் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.


அதுமட்டுமின்றி, பல மாதங்களாக அபேவை தன்னுடைய வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொண்டு கொலை செய்ய திட்டமிட்டருப்பதாக கொலையாளி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு முன்பு வெடிகுண்டு மூலம் அபேவை கொல்ல அவர் திட்டமிட்டருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.


இணையம் மூலம் வாங்கிய பொருள்களை கொண்டு அவர் துப்பாக்கி தயாரித்ததாகவும் அபேவின் மற்ற பிரசார கூட்டங்களில் அவர் கலந்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு கூட 200 கிமீ-க்கு அப்பால் அபே கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண