ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான நெதர்லாந்தில் பிரதமர் எளிமையாக தமிழர் ஒருவருடன் பேசி சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலில் வீடியோ எடுப்பதை கண்டு தயக்கம் காட்டும் பிரதமர் மார்க் , “நான் அவசரமாக காய்கறி வாங்கி செல்கிறேன் “ என சிரித்துக்கொண்டே கூற, கணேஷ் தன்னை அறிமுகப்படுத்துகிறார், தான் செய்யும் வேலையையும், நெதர்லாந்து நாட்டையும் புகழ்ந்து சொல்ல, “அதை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன் “ என்கிறார் பிரதமர். சில வினாடிகள் அவருடன் நின்று பேசிய பின்னர் பின்னர் நீங்கள் எந்த நாடு என கேட்க “நான் இந்திய நாட்டை சேர்ந்தவன் “ என்கிறார் கணேஷ். “ஓ! எனக்கு இந்தியா மிகவும் பிடிக்கும் “ என அங்கிருந்து பேசிக்கொண்டே கடந்து செல்கிறார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கணேஷ் , இங்குள்ள மனிதர்களுக்கு இது சாதாரணமான ஒன்றுதான் என்றாலும் இந்தியர்களான நமக்கு இது சற்று ஆச்சர்யமளிக்கும் விஷயம்தானே என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தான் வேகமாக செல்லும் பொழுது கையில் வைத்திருந்த காபி குவளையை கீழே சிந்திவிட்டார் பிரதமர் மார்க். அதனை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் , தானே சுத்தம் செய்த காட்சிகளும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.