விலங்குகளை அறிவோடு ஒப்பிட்டு ஐந்தறிவு, ஆறறிவு என்றெல்லாம் நாம் கணக்கில் அடைத்து வைத்துள்ளோம். ஆனால் சில நேரங்களில்... இல்லை இல்லை பல நேரங்களில் விலங்குகள் ஆறறிவு மனிதனை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. செயல்படுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. சில நேரம் அது நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும், திகழ்ச்சியாகவும் கூட இருக்கும். வெளிப்பாடு எதுவாக இருந்தாலும், நோக்கம் உணர்ச்சியாக தான் இருந்திருக்கிறது. இப்போது நாம் பார்க்கப் போகும் வீடியோவும் அப்படி தான். இது ஒரு தாய்-குழந்தைக்கான நெகிழ்ச்சி.


தாய்லாந்தில் குட்டி யானை பூங்கா ஒன்றில் விலங்குகள் கட்டிப்போடும் பகுதியில் விளையாடுகிறது. அப்போது அங்கு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள டயரில் அதனுடைய கால் சிக்கிக்கொள்கிறது. அதிலிருந்து மீண்டு வர அது நீண்ட நேரம் போராடுகிறது. முடியவில்லை. ஆனாலும் முயற்சிக்கிறது. பின்னர் தனது தாயை உதவிக்கு அழைக்கிறது. கத்துகூறது, கூப்பாடு போடுகிறது. நீண்ட நேரமாக குழந்தையை காணாமல் தவிக்கும் அந்த தாய் யானை, குட்டியின் சத்தம் கேட்டு அங்கு ஓடி வருகிறது. ‛மேட்டம் கொஞ்சம் கிரிட்டிக்கல்...’ என்பதை உணர்ந்து என்ன செய்யலாம் என யோசிக்கிறது தாய் யானை. 


தாய் வந்த சந்தோஷம்.... குட்டி யானைக்கு. எப்படியும் அம்மா காப்பாத்திவிடுவார் என்கிற தன்னம்பிக்கை. தானாகவே அந்த டயரில் இருந்து விடுபடுகிறது குட்டியானை. இனிமே இங்கே வருவீயா... இப்படி செய்வீயா என்பதை போல குட்டி யானை தலையில் ஒரு கொட்டு கொட்டி அங்கிருந்து நகரச் சொல்கிறது தாய் யானை. அத்தோடு முடியவில்லை இந்த சம்பவம்.


 


தனது குட்டிக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்பதை உணர்ந்த தாய் யானை, அந்த தொங்கும் டயரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தது தான் அந்த வீடியோவின் ஹைலைட். அதுநடக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனாலும் தாய் மீது குட்டி கொண்ட பாசம், குட்டி மீது தாய் கொண்ட அக்கறையை காட்டும் இந்த வீடியோ உண்மையில் நெகிழ்ச்சியானது தான். நீங்களும் அதை பார்த்து மகிழுங்கள்...


 



இன்றைய முக்கியச் செய்திகள்...









மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண