தென் ஆப்பிரிக்காவில் தன் குட்டிக்குத் தொந்தரவாக இருந்த முதலையை ஆக்ரோசத்துடன் கொன்ற தாய் யானையின் பாச வெளிப்பாடு குறித்த வீடியோ 5 லட்சம் பார்வையாளர்களுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.


உலகில் பெண் எப்போதும் பொறுமையானவள், எந்த அடாவடித்தனமும் செய்யமாட்டார்கள் என்பார்கள். அதே நேரத்தில், தான் 10 மாதம் சுமந்துப்பெற்ற தங்களின் குழந்தைகளுக்கு எதுவும் பிரச்சனை ஏற்பட்டாலோ? அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு  தந்தாலோ..அப்பொழுது தான் தெரியும் பெண்களின் ஆக்ரோசக்குணம் என்பார்கள். அதேப்போன்று தான் காட்டுகளில் வாழும் வன விலங்குகளும். அதிலும் குறிப்பாக இயற்கையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான யானை மிகப்பெரியதாக இருந்தாலும் அமைதியான விலங்கு என்றும், தமக்குத் தொந்தரவு கொடுத்தால் அப்போது ஆக்ரோசமாக மாறும் என்று கூறுவார்கள். அதுவும் 22 மாதங்கள் தன் வயிற்றினுள் வளர்த்துப்பத்திரமாக பெற்றெடுத்த தன் குட்டிக்கு ஒன்று என்றால் சும்மாவா விடும்.. அப்படி ஒரு நிகழ்வு தான் தென் ஆப்பிரிக்காவில் ஜாம்பியாவில் அரங்கேறியுள்ளது.



தென் ஆப்பிரிக்கா ஜாம்பியாவில் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிக்குள் நடைபெறும் படகு சவாரி என்பது மிகவும் பிரபலமான ஒன்று. அப்படி சவாரி செய்யும்போதுதான், யானை ஒன்று ஆக்ரோசமாக முதலையுடன் சண்டையிட்டு அதனைக்கொன்ற காட்சிகளை ஹான்ஸ் ஹென்ரிக் ஹாஹர் என்பவர் அதழன வீடியோ எடுத்ததோடு இணையத்திலும் பதிவிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியிட்ட இந்த வீடியோவை 567,055  பார்வையாளர்கள் இணையத்தில் பார்த்துள்ளனர். இப்படி 2 நாள்களில் இந்தளவிற்கு ஒரு வீடியோ ஏன் வைரலானது எனக்கேட்கிறீர்களா? என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது என்று நாமும் இங்கே தெரிந்துக்கொள்வோம்..


 



வனப்பகுதிக்குள் ஒரு ஆற்றினுள் இருந்த முதலை தன்னுடைய துதிக்கால் யானை குத்துவது போல வீடியோ ஆரம்பமாகிறது. பிறகு தன் கால்களால் மிதித்து அதனைப்புரட்டிப்போட்டு கொல்ல முயல்கிறது. பிறகு மீண்டும் துதிக்கையால் தூக்கிப்போட்டு விலாசுகிறது. தனது கால்களைப்பயன்படுத்தி மிதிக்க ஆரம்பிக்கும் யானை முதலை சாகும் வரை அதனை ஆக்ரோஷத்துடன் கொல்கிறது. இதனைக் கரையில் இருந்த குட்டியானையும், மற்றொரு யானையும் நின்று சந்தோஷத்துடன் வேடிக்கைப்பார்க்கிறது. மேலும் தனக்கு தொந்தரவாக இருந்த முதலையை நமது அம்மா கொன்றுவிடுவார் என்ற எண்ணத்தில் கரையில் நின்று பார்த்து ரசிக்கிறது. இதோடு முதலையின் உயிர் பிரியும் வரை தாய் யானை தனது ஆக்ரோசத்தை நிறுத்தவில்லை. இறுதியில் தனது கோபத்தைத் தணிக்க தண்ணீரைக்குடித்துவிட்டு மீண்டும் தனது குட்டியுடன் விடைபெறுகிறது தாய் யானை…சுமார் 1.40 நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாய் யானையின் பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர்.