சமூக வலைதளங்களில் எப்போதும் நல்ல உள்ளம் கொண்டவர்களின் செயல் பெரிதும் பாராட்டப்படும். எப்படி ஒரு தீங்கான விஷயம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகிறதோ அதை மாதிரி சில நல்ல விஷயங்களும் அதில் வேகமாக வைரலாகும். அந்த வகையில் ஒரு நபர் தன்னுடைய மனிதநேயத்தை வெளிப்படுத்திய செயல் ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. யார் அவர்? என்ன செய்தார்?


ட்விட்டர் தளத்தில் ஒருவர் நேற்று இரவு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மனிதர் ஒருவர் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றை வாத்துகள் கடக்க உதவி செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வீடியோவில் எப்படி அந்த மனிதர் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வாத்துகளுக்கு வழி அமைத்து கொடுக்கிறார் என்பதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அவர் பதிவிட்டு மனிதநேயம் மிக்க மனிதர் என்று கூறியுள்ளார். 






இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் அடையாளம் தெரியாத அந்த நபரை பாராட்டு வருகின்றனர். பொதுவாக சாலையில் என்ன நடந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் செல்வதுதான் பெரும்பாலான மனிதர்களின் இயல்பு. இந்த மனிதர் அதை மாற்றி சிறப்பாக உதவி செய்து தன்னுடைய மனிதநேயத்தை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.














இவ்வாறு பலரும் இந்த மனிதரின் செயலை பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவையும் பகிர்ந்து வருகின்றனர். 


மேலும் படிக்க: காபூல் குண்டுவெடிப்பு : 85-ஆக உயர்ந்தது உயிரிழப்பு எண்ணிக்கை.. உச்ச கோபத்தில் அமெரிக்கா!