கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியதை அடுத்து பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 3ம் தேதி முதல் மூன்று வாரங்களுக்கு மீண்டும் பொதுநடமாட்டக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சி வழியாக மக்களிடம் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இதனை கூறினார். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




பள்ளிகள் அனைத்திற்கும் 3 வாரங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது, மந்தமாக நடந்து வரும் தடுப்பூசி வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனாவின் மூன்றாம் அலை பிரான்ஸ் நாட்டு மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 


<blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">À partir de ce samedi soir et pour 4 semaines, les mesures de freinage déjà en vigueur dans 19 départements seront étendues à tout le territoire métropolitain. <a >pic.twitter.com/NaYUKv65o8</a></p>&mdash; Emmanuel Macron (@EmmanuelMacron) <a >March 31, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


நாட்டு மக்களிடம் பேசிய அதிபர், மருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள். ராணுவம், சுகாதார துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து படுக்கைகளின் எண்ணிக்கையை 10,000 க்கும் அதிகமாக உயர்த்துவோம். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவிற்கான போரில் போரிட்டு வெல்வோம் என்றும் அவர் கூறினார்.