Just In





Indonesia | இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை அறிவித்த அரசு!
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென பூமி குலுங்கியதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். பலர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற நிலையிலேயே சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் தொடர்பான சில வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. வீட்டிக்குள் வைக்கப்பட்ட சிசிடிவி கட்டடங்கள் குலுங்குவதை துல்லியமாக படம் பிடித்துள்ளன.
இதற்கிடையே, இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் இந்திய சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு இந்திய கடற்பகுதியில் எதிரொலிக்கும். 2004 ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் பயங்கர சுனாமி ஏற்பட்டது. சென்னை, நாகை, தூத்துக்குடி என பல்வேறு கடற்பகுதிகளை சுனாமி மொத்தமாக சுருட்டியது.
சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்