வயல் வெளியில் சேற்றில் மாற்றிக்கொண்ட யானைக்கு பெண் ஒருவர் உதவும் வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.


இணையத்தை ஆக்கிரமிக்கும் துறுதுறு விலங்குகளின் பட்டியலில் யானைகள் என்றுமே தவிர்க்க முடியாதவை.


நேரில் பார்க்கும்போதும் வீடியோக்களிலும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை!


மனிதர்களுடன் பழகுவது, மண்ணை வாரி இறைப்பது தொடங்கி, குளிப்பது, சரிந்து மலைச்சரிவுகளில் இறங்குவது என யானைகளின் ஒவ்வொரு க்யூட்டான செயல்களும் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன. 


அச்சுறுத்தும் யானைகள் தவிர்த்து இணைய வீடியோக்களை ஆக்கிரமிக்கும்  யானைகள் தங்களின் க்யூட்டான நடவடிக்கைகளால் நெட்டிசன்களை என்றுமே கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


அந்த வகையில் முன்னதாக வயல்வெளியில் சேற்றில் மாற்றிக்கொண்ட யானைக்கு பெண் ஒருவர் உதவும் வீடியோ முன்னதாக இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.


சேற்றில் சிக்கித் திணறியபோது தனக்கு உதவிய பெண்ணுக்கு வெளியே வந்ததும் யானை நன்றி தெரிவிக்கும் வகையில் தும்பிக்கையை தூக்கிக் காண்பிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.


 






ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இதேபோல் முன்னதாக  டூரிஸ்ட் பஸ் ஒன்றை நிறுத்தி அதில் யானை ஏற முயற்சிக்கும் வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.


திபன்ஷா கப்ரா எனும் ஐபிஎஸ் அலுவலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், யானையின் க்யூட்டான செய்கை இணையவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது. 


இதேபோல் முன்னதாக பானிபூரி கடை ஒன்றில் நின்று சரசரவென அடுத்தடுத்து பானிபூரிகளை யானை ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.


 







அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் இந்த வீடியோவில், பாகனும் வரும் யானை, அடுத்தடுத்து பானிபூரிகளை தும்பிக்கையை நீட்டி கேட்டு வாங்கி உண்ணும் வீடியோ இணையத்தில் சரமாரியாக லைக்ஸ் அள்ளியது.