இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் ஏஜென்சியால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதிர்ஷ்டவசமாக பெரிய அளவிலான சேதமோ அல்லது காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

Continues below advertisement

சக்திவாய்ந்த நிலநடுக்கம்

6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 147 கிலோமீட்டர் (91 மைல்) தொலைவில், கொரண்டலோவின் தென்கிழக்கே 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கொரண்டலோ, வடக்கு சுலவேசி, வடக்கு மலுகு மற்றும் மத்திய சுலவேசி மாகாணங்களின் சில பகுதிகளை உலுக்கியது. இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் ஏஜென்சியால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது?

இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்டமாகும், இங்கு அடிக்கடி இதுபோன்ற நிலநடுக்க சம்பவங்கள் நடைபெறும். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்த இடம், பசிபிக் படுகையைச் சுற்றியுள்ள நில அதிர்வு தவறுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது அமைந்துள்ளது. அதன் இருப்பிடம் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்: பவர்பேங்கில் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன் பேசிய இளம்பெண்; மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - சென்னையில் சோகம்

முன்பு வந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

இதற்கு முன்னர், நவம்பர் 21 அன்று மேற்கு ஜாவாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 331 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டு சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் கொல்லப்பட்டதற்குப் பிறகு இந்தோனேசியாவில் இது மிகவும் உயிரிழப்பாக கருதப்பட்டது. அதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமியைத் வரவழைத்தது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இது ஒரு டஜன் நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement