Dubai Man Private Island: மனைவி பிகினி உடை அணிவதற்காக ரூ.418 கோடி மதிப்பிலான தனி தீவை துபாய் தொழிலதிபர் வாங்கியுள்ளார்.


இணையத்தில் டிரெண்டான ரீல்:


இன்றைய சூழலில் தம்பதிகள் தங்களது கற்பனைக்கு அப்பால் சென்று, தங்கள் இணையருக்கு தங்கள் அன்பையும் பாசத்தையும் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் வெளியான  ரீல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும், அந்த ரீல் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில், "POV: நீங்கள் பிகினி அணிய விரும்பினீர்கள், அதனால் உங்கள் கோடீஸ்வர கணவர் உங்களுக்கு ஒரு தீவை வாங்கித் தந்தார்" என ஒரு பெண் குறிப்பிடப்பட்டு இருப்பதே, அந்த ரீல் அதிகப்படியான கவனத்தை ஈர்க்க காரணமாகும்.






 


சௌதி அல் நடக் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதான பெண்மணி தான், தனது புதிய சமூக வலைதள பதவின் மூலம் ஆன்லைனில் கவனத்தை ஈர்த்துள்ளார். சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.418 கோடி மதிப்பிலான அந்த தீவு ஆசியாவில் எங்கோ அமைந்துள்ளது. தனியுரிமை கருதி தீவின் துல்லியமான இருப்பிடத்தை  அந்த தம்பதியினர் ரகசியமாக வைத்துள்ளனர். சௌதி அதை ஜமாலின் "தற்போது வரையிலான சிறந்த முதலீடு" என்று குறிப்பிட்டுள்ளார்.


தனித்தீவை வாங்கியது ஏன்? 


தன்னை யாரும் பார்க்காமல் பிகினி அணிய இடம் வேண்டும் என்று சௌதி விரும்பியுள்ளார். இதனை தனது கணவரிடமும் தெரிவிக்க, அவர் உடனடியாக இந்த தனித்தீவை மனைவிக்கு பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார்.  இதுதொடர்பான சமூக வலைதள பதிவு தான் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஜமால் அல் நடக் என்பவரை, துபாயில் மாணவ பருவத்தில் சந்தித்ததை தொடர்ந்து சௌதி காதலிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சௌதி அடிக்கடி தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் தனது கணவருடன் தனது வாழ்க்கை முறையை அவ்வப்போது ரீல்ஸ் செய்தும் வந்தார்.