சோஷியல் மீடியா அவ்வப்போது அழகான, நெகிழ்ச்சியான, க்யூட்டான நிகழ்வுகளை உலகம் முழுவதும் வைரலாக்கிவிடும். குறிப்பாக குழந்தைகளின் தூய அன்பு கேமரா வழியாக பதிவாகும் போது அது வைரல் ஹிட்டடித்துவிடும். அப்படியான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் இதய எமோஜிகளை அள்ளி வருகிறது. இரு குழந்தைகளின் அன்பு பார்ப்பவர்களை எல்லாம்  நெகிழ்ச்சியாக உணர வைக்கிறது. 


அந்த வீடியோவில் ராணுவத்தில் பணியாற்றும் தந்தை ஒருவர் ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டுக்கு வந்து கதவைத் திறக்கிறார். தன்னுடைய தந்தையை பார்த்த சிறுமி ஒருவர் என்னுடைய அப்பா... என்னுடைய அப்பா இங்கே வந்துவிட்டார். என மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். மகளை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு ஒன்னொரு மகளைத் தேடிச் செல்லும் தந்தை சோபாவில் படுத்திருக்கும் அவளை வாரி அணைத்துக்கொள்கிறார். 




தந்தையைக் கண்டதும் அவரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். தந்தை - மகள் உறவை அழகாக வெளிப்ப்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு சில மணி நேரத்திலேயே 10000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. பலரும் அந்த வீடியோவுக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்து வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள சிலர், கண்ணீர் வருகிறது. என்னுடைய அப்பாவை நான் சில மாதங்கள் கழித்து பார்த்த போது நானும் இப்படித்தான் மகிழ்ச்சியடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 


 






அதேபோல விமான நிலையத்தில் குழந்தை செய்த ஒரு வீடியோவும் சமீபத்தில் வைரலானது. ட்விட்டர் தளத்தில் ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ கத்தார் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வெளிநாட்டிற்கு புறப்படும் பெண் ஒருவர் பாதுகாப்பு சோதனை முடிந்து தன்னுடைய விமானத்தின் லையனிற்கு சென்று கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு சிறிய குழந்தை அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு காவலர்களிடம் அனுமதி கேட்டுகிறது. அதன்பின்னர் அந்தப் பெண்ணை பார்த்து கட்டியணைத்து கொள்ளும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.