துர்நாற்றம் வீசுகிறது - புதிய வீட்டில் 'பட்டர் சிக்கன்' வாசனை - தம்பதி செயலால் கொதிக்கும் நெட்டிசன்ஸ்!

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

Continues below advertisement

ஆஸ்திரேலிய வீட்டு உரிமையாளர் ஒருவர் புதிதாக வாங்கிய வீட்டில் தொடர்ந்து பட்டர் சிக்கன், பீப் உணவுப்பொருட்களின் துர்நாற்றம் வீசுவதாக வைத்திருக்கும் குற்றச்சாட்டு சமூக வலைதளைங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

Continues below advertisement

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவர் வீட்டில் குடியேறி சில நாட்களுக்குள் அடிக்கடி துர்நாற்றம் வீசும் உணவுப்பொருட்களை உணர முடிகிறது என தெரிவித்துள்ளார். அதாவது இந்திய உணவு வகையான பட்டர் சிக்கன், பீப் போன்ற உணவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அவர்கள் அந்த துர்நாற்றத்தை போக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிகிறது. ஆனால், எவ்வித முயற்சியும் பலனளிக்கவில்லை. 

இறுதியாக இந்த துர்நாற்றத்தை போக்க யாராவது எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என அந்த ஆஸ்திரேலிய நபர் சமூக வலைதள பக்கம் திரும்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “நாங்கள் நன்றாக சுத்தம் செய்தோம், ஜன்னல்களைத் திறந்து விட்டோம், ஒரே இரவில் டிஃப்பியூசர்களை இயக்கினோம், ஆனால் துர்நாற்றம் போகவில்லை. 

 

நான் அமேசானிலிருந்து ஓசோன் ஜெனரேட்டரை வாங்க உள்ளேன். இது வாசனையை ஏற்படுத்தும் சில பாக்டீரியாக்களை அழிக்க உதவும். இது வரும் வரை காத்திருக்கிறேன்.

வீட்டிற்கு மீண்டும் வர்ணம் பூச வேண்டிய அவசியமில்லை, ஆனால் வாசனை சுவர்களில் இருப்பதாக நான் நம்புகிறேன். யாராவது இதை அனுபவித்து, துர்நாற்றத்திலிருந்து விடுபட எங்களுக்கு உதவ முடிந்தால், அது மிகவும் பாராட்டப்படும். விசித்திரமான விஷயம் என்னவென்றால், சமையலறையில் இதுபோன்ற வாசனை இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு பலரும் விவாதித்து வருகின்றனர். இந்த பதிவு இனரீதியான கருத்துக்கள் மற்றும் உணர்வின்மைக்கான விமர்சனத்தை பெற்றது. கலாச்சார சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி, பல பயனர்கள் தம்பதியினரின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இருப்பினும், சிலர் இதே போன்ற இனவாத கருத்துக்களை வெளியிட்டு தீர்வுகளை வழங்கினர். வாசனையை அகற்ற நீராவி சுத்தம் செய்யும் தரைவிரிப்புகள், வினிகர் அல்லது பேக்கிங் சோடாவைக் கொண்டு சுவர்களைத் துடைத்தல் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கினர். 

இதுகுறித்து ஒரு பயனர் கூறுகையில் ஆம் இது உண்மையான பிரச்சினை எனத் தெரிவித்துள்ளார். 

மற்றொருவர் "இந்தப் பதிவின் கீழ் உள்ள சில கருத்துகள் குழப்பமாக உள்ளன" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், மற்றொரு ஆஸ்திரேலிய யூடியூபர், இந்திய உணவு வகைகளை அதன் "அழுக்கு மசாலாக்கள்" என்று விமர்சித்ததால், சமூக ஊடகப் பார்வையாளர் மத்தியில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  சிட்னி வாட்சனின் கருத்துக்கள் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது, இந்திய உணவின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை பாதுகாக்க பயனர்கள் அவரை கடுமையாக சாடினர். 

Continues below advertisement