"எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்" என்று கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பளத்தில் உக்ரைன் பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.


கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தின் மீது பெண் ஒருவர் தனது உடலை உக்ரேனியக் கொடியின் வண்ணங்களில் "எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள்” என்ற வார்த்தைகளால் வரையப்பட்டதை வெளிப்படுத்தினார்.சிவப்பு நிறக் கறை படிந்த உள்ளாடைகளை அணிந்து, ஆர்ப்பாட்டக்காரர், பாதுகாப்புக் காவலர்களால் வழிநடத்தப்படுவதற்கு முன், புகைப்படக்காரர்களுக்குப் போஸ் கொடுத்தார்.






 


ஜார்ஜ் மில்லரின்  “த்ரீ தவுசண்ட் இயர்ஸ் ஆஃப் லாங்கிங்" திரைப்படத்தின் முதல் காட்சியில் கலந்து கொண்ட டில்டா ஸ்விண்டன் மற்றும் இட்ரிஸ் எல்பா உட்பட விருந்தினர்களின் அணிவகுப்பின் இந்தச் சம்பவம் நடந்தது.






உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி, கடந்த மாதம்  "நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை வழக்குகள்” ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடந்ததாக குற்றம்சாட்டினார்.


செவ்வாயன்று கேன்ஸ் தொடக்க விழாவில்  ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்காக உதவவேண்டும் என்று வீடியோவில் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது பேசிய அவர், “போரில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். சினிமா அமைதியாக இருக்குமா இல்லை பேசுமா.. இங்கு ஒரு சர்வாதிகாரி இருந்தால், மீண்டும் இங்கு விடுதலைக்கான போர் நடந்தால், இவையெல்லாம் நமது ஒற்றுமையை பொறுத்தே இருக்கிறது. சினிமா இந்த ஒற்றுமைக்கு வெளியே இருக்க முடியுமா..?” என்று கேள்வி எழுப்பினார்.


கடந்த மாதம் உக்ரைனில் கொல்லப்பட்ட லிதுவேனியன் இயக்குனர் மன்டாஸ் குவேடராவிசியஸின் ஆவணப்படமான "மரியுபோலிஸ் 2" வியாழன் அன்று திரையிடப்பட்டது. இந்த விழாவில் போர் ஏற்கனவே முக்கிய கருப்பொருளாக இருந்தது என்று ரஷ்யப் படைகளால் கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Aishwarya Rai : ''பெண்கள் இல்லாமல் சினிமா இல்லை'' நச்சுனு பேசி கேன்ஸ் விழாவில் கவனிக்க வைத்த ஐஸ்வர்யா ராய்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண