பெண்கள் இல்லாமல் திரைப்படங்கள் செய்ய முடியாது என்று தான் உணர்ந்ததாக கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு நேர்காணலில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறினார்.


பாலிவுட்டில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஐஸ்வர்யா ராய் பச்சனும் ஒருவர். அவரது படத் தேர்வோ, நடிப்புத் திறமையோ, அழகோ என எல்லாமே எப்போதும் பேசப்படும். 2022 கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பளத்தின் மீது தனது கண்கவர் தோற்றத்துடன் இருந்தார் ஐஸ்வர்யா. இந்த விழாவில் ரசிகர்கள் அவரது தோற்றத்தைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் தோன்றுவதற்கு முன்பே, நடிகை என்ன அணியப் போகிறார் என்பதைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த வருடம் ஐஸ்வர்யா, சிவப்புக் கம்பளத்தில் அனுபமா சோப்ராவுடன் உரையாடி, இந்த மதிப்புமிக்க திரைப்பட விழாவில் தனது 20 வருட பயணத்தைப் பற்றி மேலும் பலவற்றைப் பற்றிக் கூறினார்.


இத்துறையில் பெண்களின் நிலை எப்படி மாறுகிறது என்பதைப் பற்றி பேசிய ஐஸ்வர்யா ராய் பச்சன்,  “நீங்கள் இன்னும் அந்த உந்துதலைக் கொடுக்க வேண்டும். மேலும் பெண்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாங்கள் இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். பெண்கள் இல்லாமல் படங்களில் நடிக்க முடியாது. பெண்கள் எப்பொழுதும் திரைப்படங்களின் ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்திருக்கிறார்கள். கேமராவுக்கு முன்னால், கேமராவுக்குப் பின்னால் மற்றும் பல பக்கங்களிலும் குழுவினரின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். ஆண், பெண் வேறுபாடின்றி திறமைக்கு ஆதரவு தேவை. திறமைக்கு வாய்ப்பு தேவை” என்று கூறி முடித்தார்.




கேன்ஸ் விழாவில், ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது முதல் தோற்றத்திற்காக இளஞ்சிவப்பு நிற வாலண்டினோ பேன்ட்சூட் அணிந்து வசீகரத்தை வெளிப்படுத்தினார். மேலும், இரண்டாவது பார்வைக்காக, ஐஷ் சிவப்புக் கம்பளத்தின் மீது அலங்கரிக்கப்பட்ட மலர் ஸ்லீவ்களைக் கொண்ட கறுப்பு நிற கவுனில் நடந்தார். அழகான காதணிகள் மற்றும் கனமான கண்களுடன் அவர் ஜொலித்தார்.  முன்னாள் உலக அழகி தனது தலைமுடியைத் திறந்து வைத்து, சிவப்பு கம்பளத்தின் அருகே ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 


கேன்ஸ் விழாவில் எப்போதும் அழகாக காட்சியளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை அவ்வளவாக வசீகரிக்கவில்லை என்று கூறி நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண