தெற்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட படகு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது, மேலும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தெற்கு வங்கதேசத்தில் உள்ள சுகந்தா நதியில் சுமார் 500 பயணிகளை ஏற்றிச் சென்ற மிகப்பெரிய படகு தீப்பிடித்ததில் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்தனர். டாக்காவிலிருந்து பர்குனா சென்ற படகின் எஞ்சின் பகுதியில் அதிகாலை 3:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

Continues below advertisement


தலைநகர் டாக்காவில் இருந்து தெற்கே 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜலகதியில் உள்ள சுகந்தா நதியில் பயணிகள் ஏவுகணையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 40  பேரின் எரிந்த உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தீக்காயங்களுடன் எஞ்சியிருக்கும் 200 பேர் தற்போது உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் பயணிகள் காயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பல பயணிகள் ஆற்றில் குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த தீ விபத்து வங்கதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 15 தீயணைப்பு பிரிவுகள் அதிகாலை 3:50 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று, 5:20 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.






 கடந்த ஆகஸ்ட் மாதம் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ஏரியில் பயணிகளுடன் நிரம்பிய படகும் மணல் ஏற்றிய சரக்குக் கப்பலும் மோதியதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண