Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் நில அதிரவுகள் உணரப்பட்டன.


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்


ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில்  இன்று காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபைசாபத் பகுதியில் இருந்து 220 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.2  என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.






இந்த நிலநடுக்கம் ஃபைசாபாத் பகுதியில் 220 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக வீடு, கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் வீட்டிற்குள் இருந்த மக்கள் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில்  தஞ்சம் அடைந்துள்ளனர்.  


அதிர்ந்த டெல்லி, பஞ்சாப்...


இதனால் டெல்லி, பஞ்சாப், ஹிரியானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கம், காலை 11.23 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.  டெல்லி, பஞ்சாப், ஹிரியானா, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.




இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்



கடந்த 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. அப்போது, டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர்.  அதேபோல், கடந்த 2003ம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,  2011ம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600 க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.


கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.