சமீப காலங்களில் உலகத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மிகவும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோகரன்சிதான். பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா போன்ற நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அந்தவகையில் அமெரிக்காவிலுள்ள குடியரசு கட்சியின் உறுப்பினர் மார்க் க்ரீன் டாக்காயின் கிரிப்டோகரன்சி வாங்கி அதிக லாபம் ஈட்டியுள்ளார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கிட்டதட்ட 1000-15,000 டாலர்கள் மதிப்பிலான டாக்காயின்களை வாங்கியுள்ளார். 


இதன் காரணமாக ஏப்ரல் 1-ஆம் தேதி டாக்காயின் 0.54 டாலர்கள் என்ற மதிப்பில் வர்த்தகம் செய்யப்பட்டது மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது டாக்காயின்  மதிப்பு 0.39 டாலர்கள் என்று வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் 15 நாட்களுக்குள் கிட்டதட்ட 632 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 




மேலும் க்ரீன் ஸ்டெல்லர், ஈதரியம் போன்ற கிரிப்டோகரன்சிகளையும் வாங்கியுள்ளார். இதன்மூலம் கிரிப்டோ கரன்சிகள் மூலம் தற்போது பல ஆயிரம் டாலர்கள் லாபத்தை ஈட்டியுள்ளார். அத்துடன் மிகவும் குறைவாக இருந்த டாக்காயின் மதிப்பையும் உயர்த்தியுள்ளார். டாக்காயின் என்பது கடந்த 2013-ஆம் ஆண்டு விளையாட்டாக தொடங்கப்பட்டது. இதை உருவாக்கியவர் கூட அவரிடம் இருந்த மொத்த காயின்களையும் விற்றுள்ளார். அதன் பின்னர் மிகவும் மதிப்பு இழந்து காணப்பட்ட டாக்காயின் தற்போது பிரபலங்கள் சிலரின் வர்த்தகத்தால் மீண்டும் மதிப்புப்பெற தொடங்கியுள்ளது. 


குறிப்பாக எலோன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரில் டாக்காயின் என்ற கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை அளித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இதற்கு அளித்துள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 




இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சி பெரும்பாலும் ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் இதனை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை. எனினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை இந்தியாவில் சட்டரீதியில் முறை படுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு மிகவும் குறைந்தே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனினும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்சி பயன்பாடு மிகவும் அதிகரித்துவருகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை விரும்பும் ஆர்வலர்கள் சிலர் ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தி இந்தியாவில் பரிவர்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் தனது கொள்கை முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.