நேபாளத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.






நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் அலறி அடித்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டவில்லை.






பாக்மதி மற்றும் கண்டகி மாகாணங்களின் பிற மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.  திபெத்திய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள நேபாளத்தில், நிலநடுக்கங்கள் பொதுவானவை மேலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த தகடுகள் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு மீட்டர்கள் நகர்ந்து வருவதால் அழுத்தம் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படுகிறது.


இதே போல் அக்டோபர் 16 ஆம் தேதி, நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 


அதிகம் பாதிப்பு:


2015 இல் நேபாள நாட்டில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்துடன் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.  நேபாள் அரசாங்கத்தின் பேரழிவுக்குப் பிந்தைய தேவைகள் மதிப்பீடு (post disaster needs assesment) அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி, நேபாளம் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் 11வது நாடாகும்.    


மேற்கு ஆப்கான்ஸ்தானில் அக்டோபர் 8 ஆம் தேதி 6.3 என்ற சக்திவாய்ந்த அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, பேரிடர் நிவாரண அதிகாரிகள் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்டபோது அதிர்ச்சிகர செய்தி ஒன்றை வெளியிட்டனர். அந்த நிலநடுக்கத்தில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.