Srilanka Earthquake: இலங்கையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.. அச்சத்தில் பொதுமக்கள்..! நடந்தது என்ன?
இலங்கையில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாதிப்பு ஏதும் இல்லாததால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளனர்.
Continues below advertisement

நிலநடுக்கம் (கோப்பு புகைப்படம்)
இலங்கை புத்தள பகுதியில் இன்று காலை 11.44 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சேதம் ஏதும் ஏற்படாததால் அப்பகுதி மக்கள் அச்சப்பட வேண்டாம் என பேரிடர் மேலாண்மை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
முன்னதாக பிப்ரவரி 10 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 3 ஆகவும் பின்னர் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆகவும் இரண்டு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் புத்தள மற்றும் வெல்லவாய பிரதேசத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து இலங்கையில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.