விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில் மனுக்கள் மீது கோரிக்கை மனு ஏற்பு முத்திரை பெறுவதற்கு அதிகமான மக்கள் கூடியதால் வாக்குவாதம் ஏற்பட்டு  தள்ளு முள்ளு ஏற்பட்டது.

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திரதோறும் மக்கள் குறைதீர்ப்பு நாள் திங்கள் கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமங்களை சார்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் நடைபெறும் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரடியாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பர்.

 


 

இந்நிலையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை எழுதி கொண்டு வந்து ஆட்சியரிடம் வழங்கும் முன் அந்த மனு மீது கோரிக்கை ஏற்பு மனு முத்திரை அச்சிடப்பட்டு இணைதளத்தில் பதிவிடப்படும் என்பதால் கோரிக்கை மனுக்களில் கோரிக்கை ஏற்பு முத்திரை இடுவதற்கு ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் கூடியதால் ஊழியர்கள் முத்திரையிடமுடியாததால் ஒருவருக்குள் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மனுக்களில் முத்திரையிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து நீண்ட வரிசையில் பொதுமக்களை நிறுத்தி மனுக்கள் மீதான முத்திரையிட்டனர்.


குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?


இணைய வழி மனுக்கள் – பொது மக்களுக்கு மட்டும்


இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை/புகார் மனுக்களை, மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.


பார்க்க: http://gdp.tn.gov.in


மனுவின் நிலையை அறியவும்


இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்புகள், பொது சேவை மையங்கள், மற்றும் இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் நிலையை ஒரு மனுதாரர் அறிந்து கொள்ளலாம். இவ்வசதியைப் பயன்படுத்த, மனு சமர்ப்பிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட மனு எண்ணை மனுதாரர் அறிந்திருக்கவேண்டும்.


பார்க்கhttp://gdp.tn.gov.in