விழுப்புரம்: தேர்விற்கு படிக்காமல் எந்நேரமும் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் பனிரெண்டாம் வகுப்பு  பள்ளி மாணவி வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார்பட்டு கிராமத்தை சார்ந்த குமரன் சரளா தம்பதியினரின் 17 வயது மகள் சுதா திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று பொதுத்தேர்வு எழுதி வருகிறார். பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில் பள்ளி மாணவி அடிக்கடி செல்போனை பார்த்து கொண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் பெற்றோர்கள் சுதாவை கண்டித்துள்ளனர்.


பலமுறை கண்டித்தும் மாணவி வீட்டில் செல்போனை பயன்படுத்தி கொண்டே இருந்ததால் நேற்றைய தினம் மாணவி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டுள்ளனர். செல்போனை தரும்படி மாணவி பலமுறை கேட்டும் தராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி வீட்டிலையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார்  உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.


 


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)


 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண