விழுப்புரம் : விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் டிராக்கடருக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


டிராக்டர் கவிழ்ந்து விபத்து


விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தை சார்ந்த ஆண்டியப்பன் என்பவர் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு தளவானூரிலிருந்து விழுப்புரம் சென்று இறக்கி விட்டு, இரவு மீண்டும் தளவானூர் வந்தபோது திருப்பாச்சனூர் அருகே டிராக்டரின் டயரில் இருந்த ஹப் உடைந்து கொண்டு டிராக்டர் சாலை ஓரத்திலுள்ள 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.


டிராக்டரின் அடியில் சிக்கி கொண்ட டிரைவர்


டிராக்டர் கவிழ்ந்ததில் ஆண்டியன் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்டுள்ளார். விபத்து நடந்த பகுதி வழியாக சென்றவர்கள் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்டிருந்த ஆண்டியப்பனை மீட்ட போது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.


இதனையடுத்து டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அப்பகுதியினர் தாலுக்கா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீஸ் விசாரணை


மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் டிராக்டருக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.