விழுப்புரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை...வீடுகளில் மீது விழுந்த மரங்கள்
கனமழை பெய்ததில் கானை பகுதியில் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளில் மரம் முறிந்து விழுந்ததில் சிமெண்ட் ஷீட்கள் சேதமடைந்தன.
Continues below advertisement

கனமழையால் முறிந்து விழுந்த மரங்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் கானை பகுதியில் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளில் மரம் முறிந்து விழுந்ததில் சிமெண்ட் ஷீட்கள் சேதமடைந்தன. கானை காவல் நிலையத்தின் மீதும் மரம் முறிந்து விழுந்ததையடுத்து மரங்கள் அகற்றப்பட்டன.
விழுப்புரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை
தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிதமான மழை பெய்யகூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கானை, ஆயந்தூர், வண்டிமேடு, கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
முறிந்து விழுந்த மரங்கள்
மழையின் காரணமாக கானை பகுதிகளில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதில் கானை காவல் நிலையம் கானை குப்பம் பகுதிகளில் மூன்றிற்கும் மேற்பட்ட வீடுகளின் மேல் மரங்கள் விழுந்ததால் சிமெண்ட் ஷீட்கள் முற்றுலுமாக சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின்சார ஒயர்களும் அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்படுத்தப்பட்டு மின் ஒயர்களை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கானை காவல் நிலையதில் மரம் முறிந்து விழுந்தது மற்றும் வீடுகளின் மேல் மரம் விழுந்ததில் எந்தவித உயிர் சேதமும் இன்றி உயிர்தப்பினர். சாலைகளில் விழுந்த மரங்களை ஊழியர்கள் வெட்டி அகற்றினர். மேலும், சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
03.06.2024 முதல் 05.06.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3° செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
Continues below advertisement
06.06.2024 மற்றும் 07.06.2024:அடுத்த இரண்டு தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
Just In
Trichy Power Shutdown : திருச்சி மின் தடை-நாளை 15.07.2025! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Panjapur Bus Stand: திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்! பயன்பாட்டிற்கும் வரும் பஞ்சப்பூர்... எப்போது தெரியுமா?
அகமதாபாத் விமான விபத்து: இயந்திரக் கோளாறா? விமானிகளின் தவறா? ஏர் இந்தியா பரபரப்பு அறிக்கை
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயநிதி
’தஞ்சை திமுக எம்.பியிடமிருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது ஏன்?’ இதுதான் காரணமா..?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.