Just In

குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளின் நிலை என்ன?
தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 800 ஊசிகள் பறிமுதல், இருவர் கைது! காவல்துறை அதிரடி
பெங்களூர்-ஓசூர்-தர்மபுரி இடையே அதிவேக ரயில் திட்டம்! பயணிகளுக்கு இனிதே ஒரு புதிய பாதை!

கருப்பணசாமி கோயில் குடமுழுக்கில் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் - 107 பேர் மருத்துவமனையில் அனுமதி

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவிய பெண் காவலர்: மயிலாடுதுறையில் நடந்த நெகிழ்ச்சியான செயல்!
எல்லாரும் ஓசில தான போறீங்க.. மீண்டும் மீண்டுமா..? - திமுக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோபிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.
Continues below advertisement

கோபிநாதனை கைது செய்த போலீசார்
கடலூர் அருகே உள்ள தியாகவல்லியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் கோபிநாதன் (வயது 28), இவர் ஒரு ஓட்டல் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் அருகே மேல்பாதியில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு கோவில் திருவிழாவிற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து இருந்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன், கோபிநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறி உள்ளது. இதை அடுத்து கடந்த 22.7.2020 அன்று கோபிநாதன், ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர், அந்த சிறுமியை தான் வேலை பார்த்து வந்த ஓட்டலுக்கு கடத்தி சென்று, அங்கு வைத்தும் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோபிநாதனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவு அடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன் படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட கோபிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக பாதுகாப்பு துறையின் சமூக நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் 30 நாட்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
மேலும் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பெண்கள் மீதும் சிறுமிகள் மீதும் தொடர்ந்து பாலியல் அத்து மீறல்கள் நடைபெற்று வருகின்றன, இந்த நிலையில் இது போன்ற தீர்ப்புகள் வரவேற்க தக்கதாக இருந்தாலும், மேலும் இது போன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும் எனவும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு இந்த மாதிரியான தீர்ப்புகள் தான் சிறந்த பாடமாக இருக்கும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.