விழுப்புரம்‌ மாவட்டம்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ , மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ மாணவர்களுக்கான விடுதிகளில்‌ தங்கி பயில மாணவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்‌.


தமிழ்நாடு அரசால்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மாணவர்‌ மற்றும்‌ மாணவியர்களுக்கென மொத்தம்‌ 35 விடுதிகள்‌ செயல்பட்டு வருகின்றன. இதில்‌ பள்ளி மாணவர்களுக்கென 24 விடுதிகளும்‌ மாணவியர்களுக்கென 5 விடுதிகளும்‌ மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்கென 3 விடுதிகளும்‌ கல்லூரி மாணவிகளுக்கென 3 விடுதிகளும்‌ உள்ளன. பள்ளி விடுதிகளில்‌ 4ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்‌ 7 மாணவியர்களும்‌ கல்லூரி விடுதிகளில்‌ பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும்‌ பாலிடெக்னிக்‌ படிப்புகளில்‌ பயிலும்‌ மாணவ , மாணவியர்‌ சேரத்‌ தகுதியுடையவர்கள்‌ ஆவர்‌.


அனைத்து விடுதி மாணவ /மாணவியருக்கு உணவு தங்கும்‌ வசதியும்‌ அளிக்கப்படும்‌. 10ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியருக்கு 4 இணைச்‌ சீருடைகள்‌ வழங்கப்படும்‌. 10 ஆம்‌ வகுப்பு மற்றும்‌ 12ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ , மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள்‌ வழங்கப்படும்‌. மலைப்பிரதேசங்களில்‌ இயங்கும்‌ விடுதிகளில்‌ கம்பளி மேலாடைகள்‌ வழங்கப்படும்‌. விடுதிகளில்‌ சேருவதற்கான தகுதிகளாக, டுபற்றோர்‌ , பாதுகாவலரது ஆண்டு வருமானம்‌ ரூ.2,00,000/-க்கு மிகாமல்‌ ஒருக்க வேண்டும்‌. ஒருப்பிடத்திலிருந்து பயிலும்‌ கல்வி நிலையத்தின்‌ தொலைவு குறைந்தபட்சம்‌ 8 கி.மீ.க்கு மேல்‌ இருக்க வேண்டும்‌. இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ / மாணவியர்‌ விண்ணப்பங்கள்‌ சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌ 7 காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்‌.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌, காப்பாளினியிடம்‌ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தில்‌ 15.06.2023ககுள்ளும்‌ கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்‌ / காப்பாளினியிடம்‌ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகத்தில்‌ 15.07.2023-க்குள்ளும்‌ சமர்ப்பிக்க வண்டும்‌. மாணவ மாணவியர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பொழுது சாதி மற்றும்‌ பெற்றோரது ஆண்டு வருமானம்‌ குறித்த சான்றிதழ்கள்‌ யாதும்‌ அளிக்கத்‌ தேவையில்லை. விடுதிகளில்‌ சேரும்போது மட்டும்‌ இச்சான்றிதழ்களை அளித்தால்‌ போதுமானது. தமிழ்நாட்டில்‌ உள்ள ஒவ்வொரு விடுதியிலும்‌ முகாம்வாழ்‌ இலங்கைத்‌ தமிழர்களின்‌ குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள்‌ ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ மாணவியர்கள்‌ அரசின்‌ இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌ சி.பழனி, அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.