புதுச்சேரியில் அரசு  நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் சமீபகாலமாக தொடர்  நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்த அரசு முடிவு செய்தது. புதுச்சேரிக்கு ஒரு நாளுக்கு பாலின் தேவை 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே உற்பத்தியாகிறது. மீதமுள்ள பால் தமிழகம் மற்றும் தனியார் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், அங்கிருந்து போதிய அளவுக்கு பாலை வாங்கமுடியவில்லை. இதனால் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவியது. இதை சமாளிக்க சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு 3 ரூபாய் உயர்த்தியது. அதாவது கொள்முதல் விலை ரூ.34-லிருந்து 37 ரூபாயாக உயர்த்தியது. தற்போது பால் விற்பனை விலையையும் புதுச்சேரி அரசு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியுள்ளது. அதாவது 42 ரூபாயிலிருந்து 46 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல பல்வேறு ரகங்களின் பாலின் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர இருக்கிறது.





என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.