Anbumani Ramadoss: அன்புமணி ராமதாஸ் நீக்கம்... போர்க்கொடி தூக்கும் ஆதரவாளர்கள்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய நிலையில் மருத்துவர் ராமதாஸ் இல்ல முன்பாக கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்.

Continues below advertisement

விழுப்புரம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய நிலையில் மருத்துவர் ராமதாஸ் இல்ல முன்பாக கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சமாதானம் பேச வந்த மாவட்ட செயலாளரிடம் வாக்குவாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார். 

அதில்., 1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவப் பணியாற்றிக் கொண்டே அரசுப் பேருந்துகளில் நின்று கொண்டே சென்று கிராமங்களில் சமூகப் பணியாற்றினேன். அதன் மூலம் மக்களை வென்றுள்ளேன். சிறு மேஜை மீது, மாட்டு வண்டி மீது நின்று பேசிவிட்டு, அடுத்த கிராமத்திற்கு மிதி வண்டியில் சென்று அக்கிராம மக்களிடம் பேசுவேன். 1987-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தி 21 பேரை இழந்தேன். 1989-ல் பாமகவை தொடங்கினேன். 95 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தேன். பின்னர் மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெற்றேன். கட்சியின் மூலம் மத்திய அமைச்சர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிவரை பெற்றோம். இவைகள் எல்லாம் என் சாதனைகளாகும்.

பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர மற்ற மத்திய சிறைகளில் உரிமைகளுக்கான போராட்டத்துக்காக அடைக்கப்பட்டேன். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாமகவினரின் வேண்டுதலால் உயிர்பெற்றேன். 2026ம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டி பாமக நிறுவரான நானே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, அன்புமணி செயல் தலைவராக நியமிக்கிறேன். கெளரவத் தலைவராக ஜி கே மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கையை வாசித்தார். மே 11-ம் மாமல்லபுரம் மாநாடு வெற்றிகரமாக செயல்பட அனைவரும் உழைப்போம் என ராமதாஸ் கூறினார்.

இந்த நிலையில் திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் தலைமையின் 10க்கும் மேற்பட்டோர் மீண்டும் அன்புமணி ராமதாஸ் தலைவராக வேண்டுமென கோஷமிட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் போராட்டம் நடத்த வேண்டும் என பேசிய நிலையில் முன்னாள் நகர செயலாளர் ராஜேஷ் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ்க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola