கள்ளகுறிச்சி : சின்னசேலம் அருகே செல்போனில் பேசிக்கொண்டு வந்த இளைஞரின் செல்போன் வெடித்ததில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டதில் வாலிபர் உயிரிழந்தார்.


நாமக்கல் மாவட்டம் சண்முகபுரம் பகுதியை  சேர்ந்த நித்தீஷ் என்பவர் சென்னைக்கு  தனது  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் பகுதியில் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது  செல்போன் வெடித்ததில் நிலை தடுமாறி நித்தீஷ் ஒட்டிச்சென்ற இருசக்கர வாகனம் சென்டர் மிடியனில் மோதி  விபத்துக்குள்ளானதாக  கூறப்படுகிறது.


இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்ன சேலம் போலீசார் நித்தீஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நித்திஷிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் நீத்தீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்நிலையில் உயிரிழந்த நித்தீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சின்னசேலம் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.