விழுப்புரம்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் (2024-2025) நடைபெறவுள்ளது  என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.


பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டை


மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருதலுக்கான இலவச பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.


சிறப்பு முகாம் 


அந்தவகையில் 2024-2025-ம் நிதியாண்டிற்கு இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் 20.06.2024 (வியாழன்) மற்றும் 21.06.2024 (வெள்ளி) ஆகிய இரு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


முக்கிய ஆவணங்கள் 


விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவர்கள் மேற்படி நாட்களில்  நடைபெறவுள்ள இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், மார்பளவு புகைப்படம் -2 ஆதார் நகல் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவைகளுடன் கலந்துகொண்டு 2024-2025-ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி.பழனி தெரிவித்துள்ளார்.