விழுப்புரம்: நீட்டிலிருந்து விலக்கு பெற வேண்டும் என்றால் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றாமல், சட்டப்பூர்வமாக அனுகி நீட்டிலிருந்து  விலக்கு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை திருப்பிய ஆளுநர் ரவி மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக விழுப்புரம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் "நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் மருத்துவ படிப்பில் சேர  நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் எனவும் இந்தியா முழுவதும் நீட் தேர்வு தான் பின்பற்றப்படும் என தீர்ப்பு வழங்கியது.



தமிழக ஆளுநர் எழுப்பி உள்ள கேள்வியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான சட்டம் இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லபோகிறது" என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் “நீட் தேர்விற்கு எதிராக சட்டம் இயற்றி நிவர்த்தி செய்யாமல் அப்படியே ஆளுநருக்கு மாற்றம் செய்து திருப்பி அனுப்பினாலோ, எந்த வித பலனும் ஏற்பட போவதில்லை. மக்களை மாணவர்களை ஏமாற்றுவதற்கும் அரசியல் செய்யாமல் திமுக செயல்பட வேண்டும். நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு தமிழகத்தில் 8 மாணவர்கள் 9 மணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.


அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டு மூலம் சட்டமியற்ற பட்ட பிறகு 436 மாணவர்கள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டு 537 மாணவர்கள் மருத்துவபடிப்பில் பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நீட்டிலிருந்து விலக்கு பெற முதல்வர் ஸ்டாலின் ஒப்பாரி வைக்கிறார், ஆளுநர் கையெழுத்திடவில்லை, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என நாடகம் நடிக்கிறார்.


ஆளுநர் ஒப்புதல் இல்லாமலையே நீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினை சட்டமாக முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டி வந்ததாகவும், ஆட்சியிலும், அதிகாரத்திலும், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாமல் திமுக அரசு உள்ளது. நீட் என்ற காரணத்தை கொண்டு வரப்பட்ட சட்டத்தினால் 6 மாணவர்கள் சேர்ந்த இடத்தில் 537 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.



அதனால் காலம் தாழ்த்தாமல் மக்களை ஏமாற்றாமல் மாணவர்களை குழப்பாமல் நீட்டினை விலக்க தமிழக திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். நீட்டிலிருந்து விலக்கு பெற வேண்டும் என்றால் மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றாமல், சட்டப்பூர்வமாக அணுகி நீட்டிலிருந்து  விலக்கு பெற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முன்னாள் அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண