புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக கனமழை பொழிவு இருந்தது. நேற்று முன்தினம்  மாலை முதல் பெய்த கனமழை இரவு முதல் தீவிரம் குறைந்தது. மழை தணிந்து சாரலாக உள்ளதால் பல இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. இன்று காலை 8.30 வரை கடந்த 24 மணி நேரத்தில் 34 மி.மீ. மழை பதிவானது.





அதே நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் புதுச்சேரி கடற்கரையில் அலையின் சீற்றம் அதிக அளவில் இருந்தது. அத்துடன் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தரைக்காற்றும் வீசத் தொடங்கியது. மீனவர்கள் யாரும் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவ கிராமங்களான வம்பா கீரப்பாளையம், வீராம்பட்டினம், தவளகுப்பம், நல்லவாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 1000க்கும் மேலான படகுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.


இந்தநிலையில் காரைக்கால் மாவட்ட கடலோர மீனவ கிராமங்களான நெடுங்காடு, திருநள்ளாறு மற்றும் நகர் பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் சென்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா பார்வையிட்டார். காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட்டும் மழை பாதிப்பை ஆய்வு செய்தார். வயல் வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது. மீனவர்கள் 6 ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.




புதுவை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


புதுவை மாநிலத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு மிகவும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களது துயர் துடைக்கும் பொருட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணம் ரூ.2,500 வழங்கப்பட உள்ளது.



இந்த தொகை சுமார் 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும்   மத்திய  அரசின் பிரதம மந்திரி மட்சிய சம்பட யோஜனாவின் வாழ்வாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உதவி அளித்தல் என்ற திட்டத்தின்கீழ் சுமார் 13 ஆயிரத்து 65 மீனவர்களுக்கு தலா 4,500 வீதம் முதலமைச்சரின் உத்தரவுப்படி  வருகிற 15ஆம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதலமைச்சர் ரங்கசாமி வருகிற 15 ஆம் தேதி இதனை தொடங்கி வைப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர