ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் எனவும் தண்டனை பெற்ற சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை, இணைந்து செயல்படவே விரும்புவதாகவும் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடிப்படை தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது வெளிவருவதில்லை எனவும் தொண்டர்களின் கருத்துகளை கேட்பது ஜெயலலிதாவிற்கு பிறகு  மறைந்து போய் உள்ளதால் தொண்டர்களை அனைத்து தொகுதிகளிலும் சந்தித்து வருவதாகவும் தொண்டர்கள் யார் ஒற்றை தலைமையில் பொறுப்பேற்க  வேண்டும் என முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா போன்றவர்களால் அதிமுகவில் யார் தலைமை பொறுப்பேற்க வேண்டும் என்ற உட்கட்சி யுத்தம் நடைபெறுவதாகவும், பல்வேறு பிளவுகளால் அதிமுகவை பலவீனப்பட்டுள்ளதால் பாஜக போன்ற கட்சிகள் கால் ஊன்றவும், திமுகவை வலிமை பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிற நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையையாக்க  திணிக்க பார்ப்பதாகவும், தேசிய அளவில் அதிமுக வளர்ச்சி பெற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவிற்கு நோக்கமாக இருந்த நிலையில் சாதிய பார்வை, லஞ்சம் ஊழல், தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அதிமுக ஒற்றை தலைமை பொதுக்குழு  வழக்கில் நீதிமன்றம்  தீர்ப்பினால் இருவரும் மாறி மாறி மேல் முறையீடு மட்டுமே செய்து வருவதாலும், உட்கட்சி பூசலால்  கட்சியின் சின்னமும் கொடியும் தேர்தல் ஆணையத்தால் கட்சியின் சின்னம் முடக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். 





அதிமுகவில் சாதி வாரியாக பிளவு ஏற்படுவதை தடுக்கவே தொண்டர்களை சந்திப்பதாகவும், ஒரு ஓ. பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியை நம்பி அதிமுக இல்லை இருவருக்கும் இங்கு தலைமைபொறுப்பேற்க வேண்டிய  சுயநலம் தான் உள்ளதாகவும் ஓ பி எஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்றும் அதிமுகவில் தண்டனை பெற்ற சசிகலா தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை எனவும் இணைந்து செயல்படவே விரும்புவதாக அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கே.சி. பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்குள் அதிமுக தொண்டர்களாக வந்தவர்கள் முண்டியடித்து கொண்டு உணவு கூடத்திற்குள் சென்று உணவு உண்ன அமர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர