அமைச்சர் உதயநிதியின் கட்டுபாட்டில் இயங்கும் “வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்” கீழ் தமிழ்நாட்டில் சத்தமில்லாமல் சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதியின் கட்டுபாட்டில் இயங்கும் “வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்” கீழ் டூவீலர் மெக்கானிக் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பெண்கள் அசத்துகின்றனர்.


வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில்  படித்துவிட்டு வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் வண்ணமாக விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் வாழ்ந்து காட்டும் திட்டத்தின் சார்பில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி மூலம் இரு சக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி  20 நாள் நடைபெறுகிறது. இந்த டூவீலர் மெக்கானிக் பயிற்சியில் 20 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.


இதுபோல, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மெக்கானிக் பயிற்சி வகுப்பில் 20 மாணவர்களுடன் மூன்று பெண்களும் சேர்ந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மெக்கானிக் வேலை ஆண்கள் மட்டும் செய்வதில்லை பெண்களாலும் செய்ய முடியும் என இந்த மூன்று பெண்மணிகள் நிரூபித்து காட்டியுள்ளனர்.


மேலும் இதுபற்றி பெண்களிடம் கேட்டபோது, “ஆண்களால் மட்டும்தான் அனைத்து வேலையும் செய்ய முடியும் என்பது தவறு. பெண்களாலும் அனைத்து வேலையும் செய்ய முடியும் என்பதே உண்மை. சிரமமாக இருந்தாலும் நல்ல முயற்சியும் ஆர்வமும் இருந்தால் எந்த வேலையும் எளிதாக செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் நவீன உலகத்தில் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களும் அனைத்து வகையான வாகனங்களையும் ஓட்டுகின்றனர். திடீரென அந்த வண்டியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் மற்றவர்களை தேடி ஓடாமல் நாமளே அந்த பிரச்சனை சரி செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.


வாகனத்தை ஓட்ட தெரிந்த நமக்கு அதனை சரி செய்யவும் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது, பெரும்பாலும் பெண்கள் இரு சக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்திகின்றனர். இரவு நேரத்தில் வரும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எளிதில் மெக்கானிக் ஷாப் கிடைக்கும் வகையில் பெண்களுக்காக மட்டுமே பிரத்தேக மெக்கானிக் ஷாப் வைப்பதற்கான முயற்சிகள் நாங்கள் வருங்காலத்தில் ஈடுபடுவோம்” என தன்னம்பிக்கையுடன் பெண்மணிகள் கூறினர். மேலும் இப்பயிற்சிக்கு பின் சான்றிதழும், மற்றும்  சுயதொழில் தொடங்க வங்கி மூலம் 30% மானிய கடனும்  பெற்றிட ஏற்பாடு செய்யபடுகிறது. பயிற்சி வகுப்பிற்கு முண்டியம்பாக்கம், ஒரத்தூர், பனையபுரம், அய்யூர் அகரம் ஆகிய ஊராட்சிகளில் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டு  பயன்பெறுகின்றனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.