விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆறுவயது சிறுமியை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி, அதை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


பாலியல் வன்கொடுமை:


விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளியின் 6 வயது மகளை அதே பகுதியில் வசிக்கும் சிறார்கள் 4 பேர் சேர்ந்து சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.  பள்ளி மாணவர்களாகிய அந்த நான்கு சிறுவர்களும் அந்த வீடியோ பதிவினை தனது நண்பர்களுக்கு பகிர்ந்தபோது பள்ளியின் ஆசிரியருக்கும் அந்த வீடியோ பதிவு சென்றுள்ளது. சிறுமியை நான்கு சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாலியல் வன்புனர்வினால் பாதிக்கப்பட்ட  சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு 4 சிறுவர்களையும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். சிறுமியை 4 சிறுவர்கள் பாலியல் வன்புனர்வு செய்து வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் விழுப்புரத்தில்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.