விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 500 மீட்டர் தூரத்திற்கு ஆற்று பாலம் அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்நிலையில் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது பாலத்தின் முதல் 15 மீட்டர் வரை அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து அப்பகுதியில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் தடுப்புகள் அமைக்கப்பட்டு, விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருச்சி-சென்னை சாலையில் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பினர். இதனையடுத்து சேதமடைந்துள்ள பாலத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும் படிக்க: Villupuram Student Death: விழுப்புரத்தில் மேற்படிப்பு தொடர முடியாத வேதனையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவி தற்கொலை...!


 


செய்தியாளர்  சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:-


விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான ஒங்கூர் பகுதியில் ஒங்கூர் ஆற்றின் மீது சுமார்  30 ஆண்டுகளுக்கு முன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மூன்று இணைப்புகளை கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு இணைப்பிற்கும் நடுவில் ஸ்பிரிங், பேரிங், சீட்ஸ் போன்ற கருவிகள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதனால் பாலத்தின் முதல் இணைப்பில் இருந்து விலகி உள்ளதாகவும் இதனால் பாலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், கட்டுமான முறைப்படி பாலம் நிலையாக உள்ளதாகவும், பாலத்திற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் காலநிலை முடிவு ஏற்றுவதால் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதை கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் அலுவலர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அவர் அன்றாடம் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளிப்பார் என்றும், 10 முதல் 15 நாட்களுக்குள் இந்த பாலத்தின் வேலையை விரைந்து முடித்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண