குடியாத்தம் அருகே , ஒரு தலைப்பட்சமாக காதலித்த பெண்ணை , கட்டாய கல்யாணம் செய்து கொண்டதாக கூறி , வாலிபர் மீது பெண்வீட்டார் புகார் கொடுத்திருந்தனர் . போலீசாரிடம் அந்த பெண் தன்னை கடத்தி கட்டாய கல்யாணம் செய்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்ததை அடுத்து ஆத்திரத்தில் இன்று அதிகாலை அந்த வாலிபர் பெண்ணின்  வீட்டிற்குள் நுழைந்து ,  பெண்ணின் பெற்றோரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பிக்க முயன்ற போது கரண்ட் ஷாக் அடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  .




வேலூர் மாவட்டம் , குடியாத்தம் நகர பகுதிக்குட்பட்ட தாரணம்பேட்டையை சேர்ந்தவர் , R முகேஷ் (வயது 26 ) எலக்ட்ரோனிக் கம்யூனிகேஷன் பிரிவில் டிப்ளமோ முடித்துள்ள இவர் , தனது  எதிர் வீட்டில் வசிக்கும் மோனிஷா (வயது 25 ) பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள பட்டதாரி பெண்ணை ஒருதலை பட்சமாக , கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார் . 


 மோனிஷா தனியாக சாலையில் செல்லும் போது எல்லாம் அவரை பின்தொடர்ந்து , அவரை காதலிப்பதாகவும் , திருமணம் செய்ய விரும்புவதாகவும் , தெரிவித்துள்ளார் ,முகேஷ் .


அதற்கு அந்த பெண்  , இதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் , வீட்டில் பெற்றோர் சொல்லும் நபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பல முறை பதில் அளித்துள்ளார் .




இந்நிலையில் , கடந்த  ஜனவரி மாதம் 27 ஆம் தேதி , மோனிஷாவை , ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வர வழைத்த முகேஷ் , தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் , அப்படி செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி ,  குடியதத்தில் உள்ள தீர்த்தகிரி சுப்பிரமணியர் திருக்கோவிலில் வைத்து  தாலி கட்டியதாக கூறப்படுகிறது .


திருமணம் ,  முடிந்ததும் , தாலியை கழுட்டி வாங்கி கொண்டு , மோனிஷாவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது .




இந்த சமத்துவத்திற்கு பிறகும்  , முகேஷுடன் வாழ விருப்பம் இல்லை என்றும்  , தனது பெற்றோர்க்கு தெரிந்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் , என்று மோனிஷா பலமுறை , முகேஷிடம் தெரியப்படுத்தியுள்ளார்  . அனால் தொடர்ந்து முகேஷ் , தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றுஅவரை அச்சுறுத்தி வந்துள்ளார் .


இதனிடையே , இரண்டு வாரங்களுக்கு முன்பாக , முகேஷ் மற்றும் அவனது குடும்பத்தார் , மோனிஷா வீட்டிற்கு சென்று ,  இருவருக்கும் நடைபெற்ற திருமணத்தை பற்றி அவரது பெற்றோரிடம் தெரிவிக்க சென்றுள்ளனர் .


அப்பொழுது மோனிஷாவின் குடும்பத்தினர் , முகேஷை தாக்கி வீட்டில் இருந்து வெளி அனுப்பியுள்ளனர் . இது தொடர்பாக , முகேஷ்  குடியாத்தம் டிஎஸ்பி அலுவலகத்தில் , 'தனது காதல் மனைவியை சேர்த்து வைக்கும் படி' புகார் அளித்துள்ளார் .




அவரது புகாரை பெற்ற டிஎஸ்பி புகாரினை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தார்  . கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்த மோனிஷா , தனக்கு நடந்தது கட்டாய திருமணம் என்றும் , எனவே இந்த கல்யாணத்தை ரத்துசெய்ய உதவி செய்யுமாறு , காவல் நிலையத்தில் ஒரு மனுவை கொடுத்துவிட்டு வந்துள்ளார் .


இந்த சம்பவத்தால் மேலும் ஆத்திரமடைந்த , முகேஷ் , இன்று அதிகாலை , 5 மணியளவில் , மோனிஷா வீட்டின் சுற்று சுவரை எகிறி குதித்து , அவர்களது வீட்டிற்குள் நுழைந்து , மோனிஷாவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் , முகேஷ் ஆவேசத்துடன் கத்தியுடன் வருவதை பார்த்த மோனிஷாவின் பெற்றோர் அவனை தடுக்க முயற்சி செய்தனர் .  எனினும் அவர்கள்மேல் இருந்த ஆத்திரத்தில் இருவரையும் சரமாரியாக அவன் வைத்திருந்த பாக்கெட் கத்தியால் தாக்கியுள்ளான் .


இதில் மோனிஷாவின் தந்தை சந்திரசேகரன் , மற்றும் மோனிஷாவின் தாயார் சசிகலா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்  , பிறகு அங்கிருந்து  தப்பிக்க முயற்சி செய்துள்ளார் ,முகேஷ் .




இந்நிலையில் , மோனிஷா வீட்டின் சுற்றுசுவரில் இருந்து கீழே குதிக்க முயற்சி செய்த போது  , மேலே சென்ற எலெட்ரிக் ஒயரில் சிக்கி , கரெண்ட் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டுள்ளார் , முகேஷ்.


இந்த சம்பவம் அனைத்தும் , மோனிஷா வீட்டின் உள்புறம் மட்டும் வெளிப்புறத்தில் வைத்திருந்த சிசிடிவி- ல் பதிவாகி உள்ளது .


 இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  , கரண்ட் ஷாக் இல் காயம் அடைந்த முகேஷை , குடியத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் . மேலும் வீட்டினுள் ரத்தவெள்ளத்தில் கிடந்த , மோனிஷாவின் பெற்றோரை , குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , மேல்சிகிச்சைக்காக , சென்னியில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .




இந்த சம்பவத்தை தொடர்ந்து  , மோனிஷா வீட்டில் இருந்து சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்த  நகர காவல் துறையினர் , குற்றவாளி முகேஷ் மீது , கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .