திருவண்ணாமலை திருவூடல் வீதியில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய 4 தொகுதிகளில் உள்ள யாதவ குலத்திற்கு சொந்தமான யாதவர் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் யாதவர் மட்டுமின்றி மற்ற சமுதாயத்தினரும் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை பணம் கட்டி ரசீது பெற்று நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த திருமண மண்டபத்தை அதே சமுதாயத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நிர்வகித்து வந்த நிலையில் தொடர்ச்சியாக அவர்களே நிர்வகித்து வருவதாக குற்றம் சாட்டி பலதரப்பட்ட மக்கள்கடந்த (5.11.2022) அறவாழி என்பவரை தலைவராக முறைப்படி தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அறவாழி தரப்பினர் இன்று திருமணம் செய்வதற்காக மேல் வணக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் ரூபாய் 30,000 திருமணத்திற்காக முன் தொகை பெறப்பட்டு அதற்குண்டான ரசீதையும் வழங்கி உள்ளனர்.


 






இதையடுத்து நேற்று முன்தினம் மாலை திருமண வீட்டார் திருமணத்திற்கு தேவையான மளிகை பொருட்களை மண்டபத்திற்குள் தனி அறையில் வைத்து அதற்கு தனி பூட்டு போட்டு அறையின் சாவியை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவரும் யாதவர் திருமண மண்டபத்தின் முன்னாள் பொருளாளர் காண சங்கரின் தூண்டுதலின் பேரில் கீழ் நாத்து கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ராஜேஷ் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை அத்துமீறி திருமண மண்டபத்திற்குள் நுழைந்து திருமண வீட்டார் வாங்கி வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களை அள்ளி சென்றதாக தற்போதைய தலைவர் அறவாழி நேற்று காலை திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தற்போது இன்று சங்கர் தனது ஆதரவாளர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யாதவர் திருமண மண்டப தலைவரும், பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் அறவாழி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


 




 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த சங்கர்


கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாதவர் மடத்தை தாங்கள் முறையாக நிர்வகித்து வந்ததாகவும், இதற்குரிய கணக்கு வழக்குகள் அனைத்தும் முறையாக உள்ளதாகவும் அரவாழி என்ற தனிப்பட்ட நபர் யாதவர் மண்டப சொத்தினை அபகரித்து 99 வருட குத்தகைக்கு எடுத்து தனது நகைக் கடையை நிர்வாகம் நோக்கத்தில் செயல்படுவதாகவும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள யாதவர் மடத்தை பலமுறை பூட்டை உடைத்து உள்ளே சென்று காவலரை தாக்கி விட்டு தகராறில் ஈடுபடுவதாக திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். கீழ்நாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷிற்கும் அரவாழிக்கும், ரூபாய் கொடுக்கல் வாங்கல் தகராறு இருப்பதாகவும் அரவாழி கொடுக்க வேண்டிய 30 ஆயிரம் பணத்திற்காக மட்டுமே யாதவர் மடத்தில் இருந்த மளிகை பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் என் மீதும் ராஜேஷ் மற்றும் அவரது உள்ளிட்டவர்கள் மீது தவறான பொய் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். விரைவில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்காக அரவாழி இந்த செயலில் ஈடுபதாக குற்றம் சாட்டினார்.