நாட்றம்பள்ளி அருகே கடன் தொல்லையால் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பு ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதன் காரணமாக 4 லட்சம் செலவு செய்து மகன்கள் காப்பாற்றினர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி குதுவமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சரோஜா. இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண் பிள்ளைகள் உள்ளன.

 

சரோஜா  சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நபர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக இதற்கு முன்பு ஒரு முறை கடன் தொல்லையால் மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  4 இலட்சம் செலவு செய்து அவருடைய மகன்கள் காப்பாற்றியுள்ளனர்.

 

இந்த நிலையில் அதே போல் கடன் தொல்லை அதிகமாக நேற்று முன்தினம் மணமுடைந்த சரோஜா வீட்டின் அருகே உள்ள குமரேசன் என்பவருடைய கிணற்றில் குதித்து  தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறைகளுக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் விழுந்த சரோஜாவின் உடலை மீட்டு நாட்றம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். இதற்கு முன்பே தற்கொலைக்கு முயன்று மகன்கள் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து காப்பாற்றிய நிலையில் தற்போது சரோஜா மீண்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


உதவி மையம்




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)