திருப்பத்தூர் அருகே பல லட்சம் மதிப்பிலான டெக்கரேட்டர் பொருட்கள் எரிந்து நாசமானது,. தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் ஜெயக்குமார் வயது 35. இவர் பத்து வருட காலமாக ஸ்டார் டெகரேட்டர் என்ற பெயரில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு டெக்கரேட் செய்யும் தொழில் செய்து வந்தார்..

 

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான குடோன் கருப்பனூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கே பைபர் பாக்ஸ், சீரியல் லைட், மற்றும் சோபா செட், உள்ளிட்ட டெகரேட்டருக்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த குடோனில் இருந்துள்ளது.



 

இந்த நிலையில் இன்று திடீரென மர்மமான முறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பற்றி எரிந்து கொண்டிருந்ததை அறிந்த அக்கம்பாக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

மேலும், எரிந்து நாசமான பொருட்களின் மொத்த மதிப்பு மூன்று கோடி இருக்கும் எனவும் குடோனில் இருந்த யுபிஎஸ் வெடித்து தீ பற்றி எறிந்ததாகவும் முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. மேலும் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டெக்கரேட்டர்கள் இங்கிருந்தான் பொருட்களை வாடகைக்கு எடுத்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.